Running News

Saturday 31 January 2015

Thursday 29 January 2015

AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS

AIPEU GR.C , TN/ NFPE GDS - STATE LEVEL DIVL/BRANCH SECRETARIES MEETING DECIDES TO GO ON THREE PHASED TRADE UNION ACTION ON STATE LEVEL SECTIONAL DEMANDS

26.01.2015 SRMU  சங்க கட்டிடம் திருச்சி 

திருச்சியில் ஒரு திருப்பு முனை !
தமிழக அஞ்சல் மூன்று  மற்றும்  NFPE  GDS  சங்கங்களின் 
 மாநில அளவிலான  கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம் !

போராட்டக் களம் நோக்கி தமிழக அஞ்சல் மூன்று மற்றும் GDS  சங்கம் !

மூன்று கட்ட போராட்டம் ! 

முதற் கட்டம் கோட்ட/ கிளைகளில்  
கோரிக்கை மனு அளித்து ஆர்ப்பாட்டம் !

இரண்டாவது கட்டம் 
மண்டல மாநில அளவில்  தொடர் முழக்கப்  போராட்டம் ! 

மூன்றாவது கட்டம் 
மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் !

தமிழக அஞ்சல் நிர்வாகமே !
CBS /CIS   அதிரடி MIGRATION என்ற பெயரில் ஊழியர்களை 
கொடுமைப் படுத்தாதே !

CBS /CIS  குளறுபடிகளுக்கு உடனடி தீர்வு கொடு !  
பொது மக்களிடம் ஊழியர்களை  அசிங்கப்படுத்தாதே !

TARGET என்ற பெயரில் எந்தவித அடிப்படை 
வசதியும் செய்து கொடுக்காமல் INDOOR  ஊழியர்கள் 
மற்றும் GDS  ஊழியர்களை கொடுமைப் படுத்தாதே !

EPOST  என்ற பெயரில் சினிமா நடிகைகளுக்கும்  
அரசியல் வாதிகளுக்கும் காவடி தூக்கும், இலாக்காவை 
அசிங்கப்படுத்தும்  அதிகாரிகள் மீது  ஒழுங்கு 
நடவடிக்கை எடு !

ஆட்பற்றாக்குறையை உடனே நீக்கு ! 
SANCTIONED  STRENGTH  மற்றும் WORKING  STRENGTH  க்கு இடையிலான காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு !
IRREGULAR ASSESSMENT  செய்த அதிகாரிகள் மீது 
ஒழுங்கு நடவடிக்கை எடு !

ஆட்பற்றாக்குறைக்கு உடனே  OUTSOURCING  வழங்கிடு !
OUTSOURSING  வழங்கவில்லையானால்  OUTSOURSED  வேலைகளை 
ஊழியர்கள் புறக்கணிப்போம்  என்ற முடிவுக்கு தள்ளாதே !

ஞாயிறு  மற்றும் பண்டிகை தினங்களில் 
ஊழியர்களை பணிக்கு உத்திரவிடாதே ! 
MEETTING /MELA /TRAINING  போடாதே ! 
ஊழியர் அடிப்படை உரிமையை பறிக்காதே !

24 X  7 என்று MNC  COMPANY  போல அடிப்படை விதிகளை மீறி 
அஞ்சல் பகுதியில்  'கோமாளி' உத்திரவுகளை  போடும் 
அதிகாரிகளை கட்டுப்படுத்து ! 

CPMG  யுடனான எழுத்துபூர்வமான ஒப்பந்தந்தத்தை மீறி வயதானவர்களை கட்டாய 'SHRAMDHAN'  உத்திரவிடும் 
PTC  இயக்குனர் மீது நடவடிக்கை எடு !
தோழர். ஜெயக்குமார் சாவு போல 
'இன்னொரு சாவு' ஏற்படுத்தாதே !

எழுத்தர் தேர்வு முடிவுகளை ஆண்டுக்கணக்கில் 
தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் தூக்கத்தை  கலைத்திடு !
தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடு ! 
ஊழியர்களை பணிக்கு அமர்த்து !

பழுது பட்ட, காலாவதியான  கணினி மற்றும் 
அதன் உபபொருட்களான PRINTER , UPS, BATTERY , 
GENERATOR களை  உடனே மாற்று !

லட்சக் கணக்கில் செலவு செய்து கட்டிடங்களை அழகு படுத்தாதே ! 
அடிப்படை கட்டுமானங்களை வழங்கு !

வேலை செய்யாத  ATM  களுக்கு 
லட்சக்கணக்கில் தினம் தினம் கட்டிடமா ?
வேலை செய்யும் ஊழியர்களுக்கு  SCANNER  கூட இல்லையா ? 
 PRINT  எடுக்க PAPER கூட இல்லையா ?
 BARCODE  STICKER  கூட இல்லையா ?
இதற்கெல்லாம் பணம் அடியோடு இல்லவே இல்லையா ?

மூன்று ஆண்டுகளாய் தேங்கிக் கிடக்கும் 
LSG  பதவி உயர்வு என்னாச்சு ?
REVISED  RECTT . RULES  அடிப்படையில்
HSG II, HSG I பதவி உயர்வு என்னாச்சு ?

தொழிற்சங்க நடவடிக்ககளுக்காக பழிவாங்கும் 
 தென் மண்டல நிர்வாகத்தை கட்டுப் படுத்து !   
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக  சட்டத்தை மீறி 
வழங்கப் பட்ட தண்டனைகளை ரத்து செய் !
சட்டத்தை குப்பையில் போடும்  திண்டுக்கல் 
கோட்ட அதிகாரியின் கொட்டத்தை அடக்கு !

ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு !
இடமாற்றம் மட்டும் செய்யாதே !

ஆள் இல்லாத நேரத்தில் ஆள் நிரப்பும் 
கூடங்களாக பயிற்சி மையங்களா ?

கண்மூடித்தனமான WCTC  பயிற்சிகளை உடனே நிறுத்து !
CBS அசுர வேகம் ! SANCHAY  POST  TRAININGம்  அசுர வேகம் ! 
ஏன் இந்த முரண்பாடு ! தேவையற்ற SANCHAY  POST TRAINING  ஐ 
உடனே நிறுத்து !

கணினி உபகரணங்களுக்கு AMC உடனே  அறிவி !
கண்மூடித்தனமாக STAMP  VENDOR  பதவிகளை ஒழிக்காதே !
COUNTER இல் பணிபுரியும் ஊழியர்களை 
மேலும் மேலும் கொடுமைப் படுத்தாதே !

பொது மக்கள் உபயோகத்திற்கு  ரூ. 4/- ரூ. 5/  
DENOMINATION STAMP  உடனே வழங்கு ! 

CARD , COVER , ACK  CARD , RPLI  RECEIPT  BOOK, PASS  BOOK, 
PAY IN SLIP ,  B .O .DAILY ACCOUNT உள்ளிட்ட அத்தியாவசிய 
பொருட்களை உடனே வழங்கு !

மாதாந்திரப் பேட்டிகளை நடத்திடாத 
கோட்ட அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடு  !

மற்றும் தேங்கிக் கிடக்கும் கோட்ட அளவிலான 
பிரச்சினைகளை உடனே தீர்த்து வை !

கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை  சரி செய்து MEMORANDAM  தயார் செய்யும் பணியில் மாநிலச் சங்கம் ஈடுபட்டுள்ளது . கூட்டத்திற்கு வர இயலாத கோட்ட/ கிளைச் செயலர்கள் உடன்  தங்கள் பகுதிப் பிரச்சினைகளை  மாநிலச் செயலருக்கு EMAIL  மூலம் அனுப்பிட கேட்டுக் கொள்கிறோம். பிப்ரவரி  முதல் வாரத்தில் முதற் கட்ட போராட்டம்  அறிவிக்கப்படும் !  கோட்ட/ கிளைச் செயலர்கள் தயார் நிலையில்  இருக்க வேண்டுகிறோம்.! இரண்டாவது கட்ட  போராட்டத்தில்  வேலைநிறுத்த அறிவிப்பு மற்றும்   சட்ட பூர்வமான நோட்டீஸ்  வழங்கப்படும் !

இது நம் உரிமை காக்கும் போராட்டம் !  
நம் உணர்வுக்கான போராட்டம் !
போராட்ட உணர்வு பெருகட்டும் ! 
போராட்டத்  தீ பரவட்டும் !

அஞ்சல் மூன்று கூட்டத்தின் புகைப்படங்கள் 

Wednesday 28 January 2015

POSTMAN & MTS DEMANSTATIONS KARUR DN






NC JCM strongly opposes the Corporatization and Privatization of Government Establishments

NC JCM strongly opposes the Corporatization and Privatization of Government Establishments



No. NC/JCM/2015                                Dated: January 11, 2015

The Cabinet Secretary,
Government of India,
Cabinet Secretariat,
Rashtrpati Bhawan Annexe,
New Delhi.


 Dear Sir,

 I solicit your kind attention to my letter in No.NC/JCM/2014 dated 16 th December, 2014, wherein we had conveyed the decisions taken at the National Convention of representatives of the organisations participating in the JCM.  We are distressed that you have chosen not to respond to our letter till date. We have so far not received any communication from any quarter of the convening of the National Council of the JCM.  No effort has also been taken by any Ministry to convene the Departmental Councils.

 We have now been given to understand that the Government has taken serious steps to set up a corporation to carry on the functions of the 41 ordnance Factories, presently functioning under the Ministry of Defence. We have also noted that the report of the Committee set up by the Government to corporatize the functions of the Postal Department. The inordinate delay in settling the demands for Interim Relief and Merger of DA is causing distress amongst the Central Government employees. The Railwaymen are particularly agitated over the decision of the Government to induct FDI to the extent of 100% in Railways, which we are aware cannot be done without privatisation of the Railways. The declaration of the Convention, which we had forwarded to you vide our letter cited had amply explained the anguish of the Central Government employees.


 In order to register our opposition to the recent decision of the Government to corporatize the functions of the Ordnance factories, we have amended Item No.2 of the charter of demands. We send herewith the revised charter of demands.

 The National JCA met today and took note of the silence on the part of the Government to our pleadings. The meeting has, therefore, decided to go ahead with the agitational programmes, the first phase of which will culminate in a massive March to Parliament by Central Government employees on 28th April, 2015. 

If no settlement is brought about on the 10 point charter of demands, we will be constrained to go for an indefinite strike action, the date of commencement of which will be decided on 28 th April, 2015.

Thanking you,
Comradely yours,
sd/-
(Shiva Gopal Mishra)
Secretary (Staff Side)
NC/JCM & Convener

Copy to: 
Secretary, DoP&T – for information and necessary action pl.

Tuesday 27 January 2015

SEVENTH CPC NEWS: COMMISSIONS VISIT TO ANDMAN & NICOBAR ISLANDS:

SEVENTH CPC NEWS: COMMISSIONS VISIT TO ANDMAN & NICOBAR ISLANDS:

The Commission, headed by its Chairman, Justice Shri A. K. Mathur, proposes to visit Andaman & Nicobar Islands from 4th to 7th February, 2015.

The Commission would like to invite various entities/associations/federations representing any/all categories of employees covered by the terms of reference of the Commission to present their views.

Your request for a meeting with the Commission may be sent through e-mail to the Secretary, 7th Central Pay Commission at secy-7cpc@nic.in. The memorandum already submitted by the requesting entity may also be sent as an attachment with this e-mail.

The last date for receiving request for meeting is 31st January 2015 (1700 hours).


DISCONTINUATION OF CENTRAL RECRUITMENT FEE (CRF) STAMPS


CGEGIS 1980-- TABLE OF BENEFITS FOR SAVINGS FUND FOR THE YEAR 2015 CLICK HERE FOR DETAILS


DIRECTORATE ORDER ENHANCING PLI LIMIT to 50 LACS

Saturday 24 January 2015

HAPPY REPUBLIC DAY

  
HAPPY REPUBLIC DAY                                                             A.PALANISAMY

Tuesday 13 January 2015

SPEED DELIVERY ORDERED ON PONGAL HOLIDAY CANCELLED IN CCR

SPEED DELIVERY ORDERED ON PONGAL HOLIDAY CANCELLED IN CCR

துரித அஞ்சல்  பட்டுவாடா பொங்கல் நாளில்  சென்னை பெருநகர  மண்டலத்தில்  வடசென்னை,  தென் சென்னை , மத்திய சென்னை   மற்றும் தாம்பரம்  உள்ளிட்ட கோட்டங்களில் முக்கிய அலுவலகங்களில்  ஏற்கனவே உத்திரவிடப் பட்டிருந்தது.  

இது  குறித்து  நம்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மூலம்  PMG, CCR   அவர்களிடம் எடுத்துச் சென்று பேசிய  பின்   இன்று  பொங்கல்  நாளின் துரித அஞ்சல் பட்டுவாடா  ரத்து   செய்யப் பட்டு  உத்திரவிடப் பட்டது.  

இதர பண்டிகை நாட்களிலும்  இனி  இந்த அளவிலான பட்டுவாடா இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி  ஏற்கனவே  நாம் கடிதம் அளித்துப் பேசியுள்ளது உங்களுக்குத் தெரியும். 

இது குறித்து  உடன்  CPMG  அலுவலகத்துடன் கலந்து பேசி    விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்  என்று PMG, CCR  அவர்கள்  உறுதி அளித்துள்ளார்.   PMG, CCR   அவர்களுக்கு   ஊழியர்கள் சார்பாக  நம் மாநிலச் சங்கத்தின்  நன்றி !

Wednesday 7 January 2015

ARE THE POSTAL CLERKS 'A TESTING RAT' FOR INFOSYS ?

ARE THE POSTAL CLERKS 'A TESTING RAT' FOR INFOSYS ?

INFOSYS  நிறுவனத்தின் சோதனை எலிகளா 
தமிழகத்து அஞ்சல் எழுத்தர் ?

கடந்த  இரண்டு நாட்களாக நாடு முழுவதும்  CBS  அலுவலகங்களில்  EOD கொடுக்க முடியாமல்  மறுநாளைக்கான BOD  செய்ய முடியாமல் , COUNTER  இல் வந்த CUSTOMER  களிடம் பதில் சொல்ல முடியாமல் ,  வேறு வழியில்லாமல் வாங்கிய பணத்தையும்  VOUCHER  களையும் வரவு வைக்க முடியாமல் இரவு பகலாக தூக்கம் தொலைத்து ,  பொது மக்களிடம் 'அடி உதை'  வாங்காத குறையாய் , வசவுகளை மட்டுமே வாங்கி  தன்  பணியை இன்றுதான் முடித்தான்  நம் தோழன்  . 

இதில் தமிழகத்து  தோழனுக்கு  சிறப்பான இடம் உண்டு . 
ஏன் தெரியுமா ? நாம் தானே  சோதனை எலிகள் !  
யாருக்கு ? INFOSYS  நிறுவனத்திற்கு  !. 
ஏன் சோதனை எலிகள் ஆனோம் ? 

'எத்தனை அடித்தாலும் வாங்குகிற வடிவேலு 'வை காரணம் கேட்க
'அதில ஒருத்தன்  என்ன நல்லவன்னு சொல்லிட்டான்மா  ' என்று கூறும்  திரைப்பட வசனம் போல, நம்மை நல்லா வேலை பார்க்கிறான் ' னு  நம்முடைய  உயர் அதிகாரிகள்  சொல்லி விட்டார்கள்  அல்லவா ?

எப்படி ?  

இந்தியாவிலேயே CBS MIGRATION  முதன் முதலில் துவங்கியதும்  தமிழகத்தில்தான் .. மிக அதிக அலுவலகங்கள் MIGRATE செய்யப் பட்டதும் தமிழகத்தில் தான் ... அதுவும் அதிவேக எண்ணிக்கையில்............

அதாவது 05.01.2015 இலாக்கா புள்ளி விபரப்படி MIGRATE  செய்யப்பட  அலுவலகங்கள் :-

தமிழகத்தில் H.O.  - 94        S.O.s -  289    மொத்தம் - 383 அலுவலகங்கள் 
பீகார்                  H.O. -  1          S.O.  -   NIL    H.O. -  சத்தீஸ்கர்  - 1  S.O. - NIL 
குஜராத்             H.O. -  4          S.O.  -   NIL   ஹரியானா - H.O. -  4          S.O.  - NIL
ஹிமாச்சல்     H.O. -  3          S.O.  -   NIL   ஜார்கண்ட்  -  H.O. -  8          S.O.  - NIL 
கேரளா              H.O. - 13          S.O.  -   NIL  மத்திய பிரதேஷ் H.O. - 14   S.O. - NIL 

இப்படிப் போகிறது பட்டியல் .... உங்களுக்குத் தெரியாது .. ஆனால் நம்முடைய  அதிகாரிகளுக்கு  நன்றாகவே தெரியும்  !

இப்படி வேகமாக  செய்து முடிக்க நம்முடைய அதிகாரிகள் காட்டும் அதீத ஆர்வம்............... , அது சரியாக இருக்குமானால் நமக்கும் நிச்சயம் சரியாக ஏற்றுக் கொள்ள முடியும். அதில் தவறில்லை . ஆனால் 1100 கோடி 'ஏப்பம்' விட்ட  INFOSYS  COMPANY  யை........  வாங்கிய  பணத்திற்கு  வேலை செய்ய வைக்க நம்முடைய அதிகாரிகளால் முடியவில்லை  அல்லவா ? 

MOCK  MIGRATION செய்து பார்த்துதானே  DATA CENTRE  இல் DATA MIGRATE செய்கிறார்கள் ? 

அப்படியானால்   ஒவ்வொரு அலுவலகத்திற்கும் எத்தனை கணக்குகள் உள்ளது என்ற எண்ணிக்கை அவர்களுக்கு தெரியாதா ?  

எத்தனை அலுவலகங்கள்  ' இடையில் வரும்  ஒரு SUNDAY  அல்லது  HOLIDAY  யில்  MIGRATE  செய்ய முடியும் என்று தெரியாதா ?

அதற்கு ஏற்றார்போல அலுவலக எண்ணிக்கையை நிர்ணயித்துக் கொள்ள தெரியவே தெரியாதா ?

 03.01.2015 ஒரே  நாளில் 103 அலுவலகங்கள் MIGRATE செய்ய வேண்டிய அவசியம் என்ன ? 

அந்த DATA  06.1.2015 வரை  MIGRATE  செய்து முடிக்க முடியவில்லையே  ஏன் ? 

அதுவரை  பொதுமக்களிடம்  உதை வாங்கியது.... வாங்குவது  யார் ?அப்பாவி அஞ்சல் ஊழியன் தானே  ? 

1100 கோடி வாங்கிய INFOSYS காரன்  அல்லவே ?

06.01.2015 BOD  06.01.2015 மாலை 06.45 க்கு  துவக்கலாம் என்று  வெட்கமில்லாமல் MAIL  கொடுப்பதை  நம் அதிகாரிகள் எவ்வாறு ஏற்கிறார்கள் ? 

நாம் ஒரு TRANSACTION  செய்யவில்லை என்றால்கூட   RULE  16 கொடுக்கத் துடிக்கும் அதிகாரிகள் ,  நாடுமுழுதும் உள்ள 1539 MIGRATE  செய்யப் பட்ட அலுவலகங்கள்  இரண்டு நாட்களாக ஸ்தம்பித்தபோது  என்ன செய்தார்கள் ?   

பல லட்சம் மக்களின்  சேவை பாதிக்கப்பட்டதற்கு என்ன செய்தார்கள் ?

CUSTOMER  இழப்புக்கு என்ன செய்யப் போகிறார்கள் ? ஓ ! குட்டி அதிகாரிகள்தான்  நம் ஊழியனின் 'பெண்டாட்டி' பேரிலும் 'பிள்ளை' பேரிலும்  பல நூறு கணக்குகள் துவக்கிடச் சொல்லுகிறார்களே ? பார்த்துக்கொள்ளலாம் ... என்ற நினைப்போ  ? 

எத்தனை மனித உழைப்பு நாட்கள் வீணடிக்கப்பட்டன ? இந்த நஷ்டத்தை எவர் தலையில் கட்டுவது ? 

இத்தனைக்கு  இது முதல் தடவை அல்லவே ?  ஒவ்வொரு திங்கள் கிழமையும்  CBS  அலுவலகங்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அல்லவா நம் அப்பாவி ஊழியன் உள்ளே நுழைய வேண்டி உள்ளது ? .  

இதற்கெல்லாம் ஏன்  INFOSYS  COMPANY  மீது 
சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவில்லை ? .  

ஏன் நஷ்ட ஈடு கோரவில்லை ? 

ஏன்  CONTRACT  ஐ ரத்து செய்யவில்லை ? 

ஏன் BLACK  LIST  செய்யவில்லை ? 

ஓ ! அதெல்லாம்  மேலிடத்து சமாசாரமோ ? இருக்கட்டும் ... 
அப்படியே இருக்கட்டும் ... 

அது எங்கள் வேலையில்லை என்றாலும் கூட ... என் அப்பாவி ஊழியனை ஏன் கொடுமைப் படுத்துகிறீர்கள் ? 

ஏன் இந்த 'பேய்' வேகம் ?  ' ஓட்டைச் சட்டி' என்று இத்தனை மாதங்களுக்குப் பிறகு புரிந்த பின்னுமா   MIGRATION இல் வேகம் ? 

இத்தனை  பிரச்சினை இருக்கும் போது எந்த மாநிலங்களிலும் இல்லாமல்  இங்குமட்டும் ,  ஏன் இந்த வேகம்?   சற்று நிறுத்திதான் செய்யலாமே ? 

இத்தனைக்கும் வங்கித்துறையில் இன்று பல நிறுவனங்கள் 'FINACLE ' சரியில்லை என்று கழற்றி விடுவதாக  பத்திரிகை செய்தி தினம் தோறும் வருகிறதே ?  பார்க்கவில்லையா ?

"(UBI), which markets itself as 'the bank that begins with U', has taken a U-turn a day after it blamed deficiencies in Infosys' software"  ...BUSINESS STANDARD - 07.01.2015.

எது என்ன ஆனால் என்ன ? ... அஞ்சல் ஊழியன்... தமிழக அஞ்சல் ஊழியன் ...  பன்னாட்டு நிறுவனங்களின்  சோதனை எலிகளாக்கப்பட்டு வருகின்றான் ...  இது சரியா ?


இது எவருடைய குற்றம் ?  காலத்தின் குற்றமா ? கர்த்தாவின்  குற்றமா ? 

தேவை  மறு பரிசீலனை .... 
சொல்லிப் பார்க்கிறோம் ....
கேட்டுப் பார்க்கிறோம் .... 
எழுதிப் பார்க்கிறோம் ....  

பிரச்சினை தீரவில்லை எனில் ... 
போராட்டம் ஒன்றே வழி என்று நம்மைத் தள்ளுவார்களேயானால் ... 
வேறு வழியில்லை ..களம் இறங்கிடுவோம் .. 
பிரச்சனைகளை  வீதிக்கு கொண்டுவருவோம் ...  

சாவதற்கு நாம் சோதனை எலிகளல்ல என்று காட்டுவோம் ....  
பால் கொடுத்து உயிர்காக்கும் பசுக்கள் ... 
பாதிப்பு வந்தால்  கொம்பு சுழற்றி   களம் இறங்கும் 
என்பதை புரிய வைப்போம் ...

விரைவில் போராட்டத்திற்கு தயாராவோம் ! 

Sunday 4 January 2015

CHANGE IN TRAINING SESSION AT PTC, MADURAI ON THE EVE OF PONGAL FESTIVAL

CHANGE IN TRAINING SESSION AT PTC, MADURAI ON THE EVE OF PONGAL FESTIVAL

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.12.2014 அன்று CPMG (I/C) திரு. BARMMA  அவர்களைச் சந்தித்து  பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கடிதம் அளித்து பேசிய விபரம்  அன்றைய தேதியில்  நம்  மாநிலச் சங்க வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். இதில் முக்கிய பிரச்சினையான  PONGAL  பண்டிகை  காலத்தில் மதுரை PTC  யில்  உத்திரவிடப் பட்டிருந்த  TRAINING SESSION  மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதே . அதற்கு அவரும் உடன்  ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்த விபரம்  தெரிவித்திருந்தோம். 

அதன்படி  எதிர்வரும் 05.01.2015 முதல் 17.01.2015 வரை அறிவிக்கப் பட்டிருந்த  பயிற்சி வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு , இடையில் வரும் 10.01.2015 மற்றும் 11.01.2015 நாட்கள் பயிற்சி வகுப்பு நாட்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால்  பயிற்சி வகுப்புகள் அனைத்தும் பொங்கலுக்கு முதல் நாளே , அதாவது 14.01.2015 அன்றே முடிக்கப்பட்டு விடும்.

பயிற்சி வகுப்புக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  பணிக்கப் பட்டிருந்த 130 ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நல்  வாழ்த்துக்கள் !  

நம் கோரிக்கையை ஏற்று இதற்கான  முயற்சிகளை மேற்கொண்ட  CPMG (I/C) திரு. BARMMA அவர்களுக்கும் , DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த  AD (STAFF ) திரு. ஆறுமுகம் அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இது குறித்த DIRECTOR  PTC  அவர்களின் பதிலை கீழே  பார்க்கவும்.

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.12.2014 அன்று CPMG (I/C) திரு. BARMMA  அவர்களைச் சந்தித்து  பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கடிதம் அளித்து பேசிய விபரம்  அன்றைய தேதியில்  நம்  மாநிலச் சங்க வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். இதில் முக்கிய பிரச்சினையான  PONGAL  பண்டிகை  காலத்தில் மதுரை PTC  யில்  உத்திரவிடப் பட்டிருந்த  TRAINING SESSION  மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதே . அதற்கு அவரும் உடன்  ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்த விபரம்  தெரிவித்திருந்தோம். 

அதன்படி  எதிர்வரும் 05.01.2015 முதல் 17.01.2015 வரை அறிவிக்கப் பட்டிருந்த  பயிற்சி வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு , இடையில் வரும் 10.01.2015 மற்றும் 11.01.2015 நாட்கள் பயிற்சி வகுப்பு நாட்களாக  அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால்  பயிற்சி வகுப்புகள் அனைத்தும் பொங்கலுக்கு முதல் நாளே , அதாவது 14.01.2015 அன்றே முடிக்கப்பட்டு விடும்.

பயிற்சி வகுப்புக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  பணிக்கப் பட்டிருந்த 130 ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கு  நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நல்  வாழ்த்துக்கள் !  

நம் கோரிக்கையை ஏற்று இதற்கான  முயற்சிகளை மேற்கொண்ட  CPMG (I/C) திரு. BARMMA அவர்களுக்கும் , DPS  HQ  திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த  AD (STAFF ) திரு. ஆறுமுகம் அவர்களுக்கும்  ஊழியர்கள் சார்பாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  இது குறித்த DIRECTOR  PTC  அவர்களின் பதிலை கீழே  பார்க்கவும்.

Friday 2 January 2015

அஞ்சல் மூன்று மாநிலச் சங்க வலைத்தளத்தில் இருந்து நகல் செய்யப்பட்டது.




புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை !

அன்புத் தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய  இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன்  2014 இல்  நம்முடைய கடின உழைப்புக்கான பாராட்டினையும்  தெரிவித் துள்ளார்கள் !  அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !

நடப்பு ஆண்டில் நம்  இலாக்காவின்  வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள் குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய  திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது குறித்தும்  தெரிவித்துள்ளார்கள்.  

இலாக்காவின் ஊழியர்கள் என்ற வகையில்,  நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில்  நம் எல்லோருக்கும் நிச்சயம்  அதற்கான  கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம் பங்கும் அதில் உள்ளது.  நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் . நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று  உறுதி கூறுகிறோம்.

ஆனால்  அதற்கான அடிப்படை  தேவைகள் குறித்தும்  நிர்வாகம்  தன்  பார்வையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை  இந்த  நேரத்தில் நாம்  பதிவு  செய்கிறோம். நம்முடைய ஊதிய  உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம்  நாம்  வலியுறுத்தவில்லை. அதற்கான  அரங்கு என்பது  வேறு. மத்திய  அரசின்  பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட,  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள்  சார்பாக  அதனை  நாம்   கொண்டு செல்கிறோம்.  

ஆனால்  நம்முடைய  இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே  உள்ளது  என்பதே  நம் ஊழியர்களிடம்  உள்ள  மனத் தாங்கல். அதனை  இந்தப் புத்தாண்டில்  தெரிவிக்க வேண்டிய  கடமை  நமக்கு உள்ளது.

உதாரணமாக

இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு  ரூ. 4909/- கோடியை ஒதுக்கியது  மத்திய அரசு. அதில்    ஒரு     பைசா கூட  நம்முடைய  தகவல் தொழில் நுட்ப  அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ? 

2000 - 2004 களில் அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் , BAR CODE  SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக் குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம் போ" என்று விரட்டுவது வேடிக்கையான விஷயமில்லையா?  உடனே பரிசீலிக்க வேண்டிய  ஒரு  அத்தியாவசியமான அவசர அவசியம்  இல்லையா ?   

TECHNOLOGY TRANSFER  என்ற வகையில் மென்பொருள்  அளிப்பதற்கே  ரூ.4909 கோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ? 

அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக ,  அதன் சட்ட விதிகள் , சேமிப்பு வங்கி தொடர்பான நம்முடைய  இலாக்காவின்  தனித்துவமான திட்டங்கள், காப்பீட்டுப் பகுதியில்  நம்முடைய  இலாக்காவின் தேவைகள்  குறித்தெல்லாம் முறையான ஆய்வு செய்து  அதற்கான மென்பொருள்   வடிவமைத்துப் பெறாமல், எவருக்கோ செய்த  காலணியை  நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய  பாதங்களை வெட்டுவது போல"  இன்று  இந்த திட்டங்கள்  நடைமுறைப் படுத்தப்படுவது சரிதானா ? 



                                                    
இதுபோலத்தான் ,  MAIL OPERATION, FINANCE & ACCOUNTS,  RETAIL OPERATION, RURAL ICT, HR  போன்ற பகுதிகளிலும்  தனித்துவமான  மென்  பொருள் பெறாமல்   வேறு எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?
இதனையெல்லாம் சரி செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு  (2 YEARS FOR IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப் பதுங்குவதும்,  நம் அப்பாவி  ஊழியர்கள்  பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு பகலாக " களத்தில்  வேலை செய்ய வேண்டி உள்ளதும்  சரிதானா ? 

"இட்லி   திங்கச் சொன்னது ஒருத்தனையாம்   - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற  கிராமத்து பழமொழி இதற்காகத்தான்  வந்ததோ ? 

தினந்தோறும்  எத்தனை எத்தனை  பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல"  எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ? 

எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம்"  தேவை என்று கூட அறியாமல் LAPTOP  இல் போடும்  DATA  CARD  க்கு உண்டான  256 KBPS /512 KBPS  BANDWIDTH  மட்டும்  பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION"  என்று   "அச்சு மற்றும் மின்னணு  ஊடகங்களுக்கு  பேட்டி கொடுப்பது" சரிதானா ?

NET WORK CONNECTIVITY  இல்லாததால் TRANSACTION  செய்திட இயலாமல் பொதுமக்களிடம்  அடிவாங்கும் அளவுக்கு ஊழியர்கள் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது ?  இது  தெரியவே  தெரியாதா ?

‘இப்போது மேம்படுத்தப்பட்டுவிட்டது’, ‘எல்லாமே சரியாகிவிட்டது’   என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே   உள்ளோம் ?  பல நாட்கள்  ' HANG  OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள்  மறந்துவிடும் என்று சமாதானம் செய்தால்,  பொது மக்களும்  அப்படியே  சமாதானமாகி விடுவார்களா ?

பல நூறு கோடிகள்  கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப   மற்றும்  துறை சார் அறிவு கொண்ட  அதற்கான  வல்லுநர் குழு அமைத்து அனைத்து  பகுதிகளையும் ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ?  ஏனோ தானோ வென்று  ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும்  அடிமட்ட தொழிலாளி தலையில் கட்டி " ஓடு  ஓடு"  என்றால் எப்படி  ஓடுவது  என்று  சிந்திக்க வேண்டாமா ?  

இத்தனைக்கும்  நம் எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே?  மேலும் அதில் பாதி பேர், பழைய  8TH  STANDARD  QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு தபால்காரராக /MTS  ஆக பணியாற்றி  பதவி உயர்வு பெற்ற  எழுத்தர் தானே ?  இவர்கள்  ஒரே நேரத்தில்  52 SOFTWARE  நம் துறையில் HANDLE  செய்யும் அளவு  அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT   நினைவில் கொள்ளும் வண்ணம்  தொழில் நுட்ப  அறிவு மேம்பட்ட  தகவல் தொழில் நுட்பத்  துறையில்  உயர் கல்வி பெற்றவர்களா ?  

இருந்தும்  இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத  புதுமை  இல்லையா ?  இது குறித்து என்றாவது , எவராவது  ஒரு வரி பாராட்டியது உண்டா ?  பாராட்டு கூட  ஒரு "ஊக்க மருந்து"  தானே ?

வேறு எந்த மத்திய அரசுத் துறையிலாவது கணினிகளில்  ஒரே நேரத்தில் 52 SOFTWARE  பயன்பாட்டிற்கு உள்ளதா ?  ஏன் ?   தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது  தொழில்


                                                                                          
நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற  உயர் கல்வி பெற்றவர்கள் பணி புரியும் MNC  க்களில் கூட இத்தனை  SOFT  WARE  ஒரு ஊழியர்  கையாள்கிறாரா  ?  இல்லையே !

இவ்வளவு  ஊழியம்  செய்தும், அதுவும் ‘INITIALISATION’ காலத்தில் ‘TRANSITION “  காலத்தில் , ஊழியர்,    தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை தொழில் நுட்ப ரீதியாக  சரி செய்திடும்  விபரம் கூட  சிறிதும் தெரிந்துகொள்ளாத சில  கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE  16 போடுவது தவிர வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில்  ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு  மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ?  பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?

BUSINESS  DEVELOPMENT  கூட்டங்களில்  வெறும் TARGET  பற்றி மட்டும் பேசுவது சரிதானா ?  அதனை சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர்கள்  சரியான  WORKING ENVIRONMENT இல்லாமல் எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து என்றைக்கேனும் ஆய்வு செய்தது உண்டா ?   

வணிக வளர்ச்சி,  மாத  இலக்கு என்ற பெயரில்  'MULTI  LEVEL  MARKETING  COMPANY " கள்  போல "உன் பெண்டாட்டி பேரில்  100 RD கணக்கு போடு " , "பிள்ளை  பேரில் 100 RD கணக்கு போடு " , அடுத்த PREMIUM மே  கட்டாத  "'பினாமி "  RPLI  பாலிசிகள்  GDS  ஊழியர் சம்பளத்தில் போடு" என்று வணிக  யுக்தியே  சிறிதும் தெரியாத சில  கீழ்மட்ட  அதிகாரிகளின்   தினசரி  நடவடிக்கைகள்  நம் துறையை  நிஜமான  வளர்ச்சி  பெற  வைக்குமா ?  வீழ்ச்சி பெற வைக்குமா?  இது குறித்து  சிந்திக்க  வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ? 

EPOST  சேவை எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே போட்டியிட முடியாத  இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது  கூட தெரிந்துகொள்ளும்  அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல்   "சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000  EPOST  போடு"    "ரசிகர் மன்றம் நீயே  அமை"  என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் சில கீழ் மட்ட அதிகாரிகளை  உங்களுக்குத் தெரியவே தெரியாதா ?  இவையெல்லாம்  நம் துறையை  வளர்ச்சி பெற வைக்குமா ?  இது குறித்து சிந்திக்க வேண்டாமா ? 

பல ஆயிரக் கணக்கான  காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?  

காலியிடங்களை நிரப்ப போராடி  நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள்  வெளி வருவதில்  ஆண்டுக் கணக்காக  ஆகிறதே ? இது சரி செய்யப்பட வேண்டாமா ?

புதிய  வேலைகளுக்கு  அளவீடு  என்பது வேண்டாமா ? 

இப்படி எத்தனை  எத்தனையோ கேள்விகள் -   சாதாரண அடிப்படை ஊழியனின்  மனதில் - புத்தாண்டு  கேள்விகள் உண்டு !  இவற்றையும்  நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை நம்  நிர்வாகத்திற்கு உண்டு ! 

இந்த திசை நோக்கியும் பார்த்தால் மட்டுமே   நம்மால் இலாக்காவை  நினைக்கும் திசையில் , உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ?  ஒரு திசைப் பார்வையில் "இலக்கு" "இலக்கு"  என்று  சாட்டையை சுழற்றினால்  அதில் பெறுவது  நிச்சயம்  வளர்ச்சியாக  இருக்காது . வீக்கமாகவே இருக்கும் .  செயற்கையான வீக்கம்  நோயின் அடையாளம் !

நாம் நோய் பெறப் போகிறோமா? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது நம் கையில் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி  நினைக்கவேண்டும் என்று   இந்தத் துறையின்  ஊழியர்களான நாம்  நினைப்பதில் தவறு எதுவும் உண்டோ ?  சிந்திக்க வேண்டுகிறோம்.

= அஞ்சல் மூன்று மாநிலச் சங்க வலைத்தளத்தில் இருந்து நகல் செய்யப்பட்டது.