Running News

Thursday 19 February 2015

முதற்கட்ட போராட்டம் முழு வெற்றி !

கரூர் தபால் ஆர்எம்எஸ் பிரிவு கரூர் பகுதியில்

              கரூர்  639001

முதற்கட்ட போராட்டம் முழு வெற்றி !

அடக்குமுறைக்கு அஞ்சிடோம் !
ஆணவத்திற்கு அடிபணியோம்
மாநில அளவிலான அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  சங்கங்களின் கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவினை ஒட்டி,  நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்த்திடக் கோரியும்,  TARGET  என்ற பெயரில் ஊழியர்கள் மீது  நடத்தப்படும்  கொடும் தாக்குதல்களையும் மற்றும் அதிகார  அத்து  மீறல்களையும்   கண்டித்தும் 40 அம்சக்  கோரிக்கைகளை  வலியுறுத்தி  17.2.2015  தமிழகம்   தழுவிய  அளவில்  அனைத்து   கோட்ட      மற்றும் கிளைகளில், முதல் கட்ட போராட்டமாக   கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது
அதன் அடிப்படையில் நமது கோட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.  கலந்து கொண்ட அனைவர்க்கும் கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்

A.PALANISAMY P3                            S.KUMARAN P4   KARUR DN.

No comments:

Post a Comment