Running News

Tuesday 13 October 2015

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு வெற்றி !

SUCCESS TO CIRCLE UNION EFFORTS ON LATE DETENTION OF OFFICIALS AT ALL CBS OFFICES DUE TO EOD PROBLEMS

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத 
முயற்சிக்கு வெற்றி !
 
EOD  பிரச்சினையில் இரவு நீண்ட நேரம் காத்திருப்புக்கு  முற்றுப் புள்ளி ! 

09.10.2015  CPMG  யுடனான நம்முடைய பேச்சு வார்த்தையில் அளித்த உறுதி மொழியின்படி  இன்று (12.10.2015) தமிழகம் உள்ளிட்ட அனைத்து அஞ்சல் வட்டங்களுக்கும் (இந்தியா முழுமைக்கும் )  HISCOD  மூலம் பணி  முடிக்க மென்பொருளில் புதிய முறை அறிமுகம் ! 

CBS தொடர்பான இதர பிரச்சினைகளும் அறிவித்த காலக் கெடுவுக்குள் CPMG அவர்கள் முடித்து தருவார் என்று நம்புகிறோம் !
 
ஏற்கனவே  23.6.2014 இல் நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் ஏற்பட்ட முடிவின்படி   இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை EOD  என்பது CPC மூலம் அளித்திட 
நாடு முழுமைக்கும்  நமது மாநிலச் சங்கம் 
உத்திரவு பெற்றது நினைவிருக்கும்.

தற்போதைய இந்த உத்திரவு மூலம் VALIDATION மற்றும் SUPERVISOR  VERIFICATION  முடித்தவுடன், CPC மற்றும் SPOC உத்திரவை எதிர்பார்த்து,  DC  CLOSURE க்கு எதிர்பார்த்து காத்திருந்து 
EOD  கொடுக்க வேண்டுமே என்று இனி கவலையுறவேண்டாம் !  இல்லையெனில் மறுநாள் காலை வரவேண்டுமே எனவும் 
கவலையுற வேண்டாம் ! 

நமது கடிதத்தை ஏற்று, இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி ஆவன செய்திட மேற்கொண்ட  
CPMG  DR . CHARLES LOBO  அவர்களுக்கும்  
CEPT  DY . DIRECTOR  திரு. V .M . சக்திவேலு அவர்களுக்கும் நம்முடைய மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !
கீழே பார்க்க  CPMG  அவர்களின் உத்திரவு நகலை !
===============================================================
 
 
 
A.palanisamy  karur dn

No comments:

Post a Comment