Running News

Sunday, 27 December 2015

01.01.2016 COMPULSORY ATTENDANCE

01.01.2016 COMPULSORY ATTENDANCE



அன்பு தோழர்களே, தோழியர்களே,

     01.01.2016 அன்று கண்டிப்பாக Duty இல் இருக்கவேண்டும். இல்லையென்றால் Increment தள்ளிபோகும் என பரவலாக ஒரு செய்தி உலா வருவதால் அவர்களுக்கு நாம் சொல்லும் பதில் .01.01.2016 என்பது புதிய ஊதியத்தை நிர்ணயம் செய்யும் நாள். எப்படி ஜூலை 1 ம் தேதி பணியில் இல்லை என்றால் Increment தள்ளிபோகுமோ அதே பார்முலா தான் இதற்கும் பொருந்தும் .

(Casual leave which is not recognized as leave under these rules shall not be combined with any other kind of leave admissible under these rules.)

Tuesday, 22 December 2015

Strengthening establishment of Single Handed Branch Post Offices - order date 17.12.2015

Strengthening establishment of Single Handed Branch Post Offices - order date 17.12.2015


                         
                                இதுதான்  அரசு  இயந்திரம் !

B .O . க்களில்  வேலை  இல்லை . அங்கே  எதற்கு MC    பணிக்கென்று தனியே ஒரு  ஆள்  ?  அங்கே  எதற்கு  MD  பணிக்கென்று  ஒரு  ஆள்  ? எல்லா   பதவிகளையும்  ஒழி . BPM தலையிலேயே   கட்டு !  அவனே   எல்லா வேலைகளையும்  செய்யட்டும் !  .....   இப்படி  உத்திரவிட்டார்கள் ஒரு  நாள் .

BPM கள்  தடையின்றி  COUNTER  பணிகள்  செய்யவேண்டும் ! அதனால்  B.O. க்களில்  MD மற்றும் MC  பணியாற்ற உடனே  அதற்கென்று  தனியே ஆட்களை போடு !  ஆட்கள் REDEPLOYMENT இல் போட இயல வில்லையெனில்  'POST  WHICH WERE  KEPT  IN ABEYANCE' ஐ பயன்படுத்தி MD/MC  பதவிகளை  நிரப்பு !.. இப்படி  உத்திரவு இடுகிறார்கள் வேறு  ஒரு நாள்  !

அய்யா  ! இதைத்தானே காலம் காலமாக நாங்கள்  சொல்லிக் கொண்டு இருக்கிறோம் !  அப்போதெல்லாம்  உங்கள் காதில் விழவில்லையே ! இப்போது  ஏதோ  'ஒபாமாவிடம்' சென்று கேட்டு  வந்து செய்வது  போல செய்கிறீர்களே  !   இந்த  சின்ன  விஷயம்  புரிய  உங்களுக்கு  இத்தனை  காலமா ? 

இப்படித்தான்   SPM /APM   போன்ற  INDOOR STAFF களுக்கு  BUSINESS  TARGET FIX செய்யாதீர்கள் . அதற்கென  தனியே  ஆட்களை  நியமியுங்கள்  என்று சொல்கிறோம் நாம்.  ஆனால்   இது  நிர்வாகத்தின்   காதுகளில்  விழவே இல்லை !  இனி  'ஒபாமாவிடம்'  சென்று தெரிந்துகொண்டு  வந்து, இரண்டு ஆண்டுகள்  கழித்து  .... ஆமாம் ! INDOOR  STAFF ஆல்  BUSINESS CANVASS செய்ய  இயலாது ! அதற்கு  மாற்று ஏற்பாடு  செய்கிறோம்  என்று சொல்வார்கள் !  அதற்குள்  பாதி பேர்  'PUNCTURE'  ஆகி  இருப்பார்கள்  !

இதுதான்  அரசு  இயந்திரம் !
எப்படியோ  நம்ம  GDS ஊழியர்  இப்பவாவது  பிழைத்தால்  சரிதான்  !
கீழே  பார்க்க   உத்திரவின் நகலை !

Tuesday, 15 December 2015

INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016

INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016 - Hold demonstrations on 30.12.2015 in front of all offices and Submit copy of the Charter of Demands


INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016

Hold demonstrations on 30.12.2015 in front of all offices and Submit copy of the Charter of Demands to Head of offices for onward transmission to Cabinet Secretary.

Conduct three days Dharna at all state capitals and Industrial Centres/Establishments on 19th, 20th & 21st January 2016.

NJCA will meet on 8th February 2016 to decide the date of commencement of indefinite strike.

(M. Krishnan)
Secretary General
Confederation

 NJCA CIRCULAR ENCLOSED

Monday, 14 December 2015

INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016


INDEFINITE STRIKE FROM 1st WEEK OF MARCH 2016

Hold demonstrations on 30.12.2015 in front of all offices and Submit copy of the Charter of Demands to Head of offices for onward transmission to Cabinet Secretary.

Conduct three days Dharna at all state capitals and Industrial Centres/Establishments on 19th, 20th & 21st January 2016.

NJCA will meet on 8th February 2016 to decide the date of commencement of indefinite strike.

(M. Krishnan)
Secretary General
Confederation

Thursday, 10 December 2015

மாநில தலைமையகத்து செய்திகள்

CIRCLE LEVEL NEWS UPDATES

மாநில  தலைமையகத்து செய்திகள் 

1. எதிர்வரும் 11.12.2015 அன்று  நமது சம்மேளனத்தால் அறிவிக்கப் பட்டிருந்த நாடு தழுவிய  உண்ணாவிரதப் போராட்டம்  ,  தமிழகத்தின் பல பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக தற்போது தமிழகத்தில் மட்டும் ஒத்திவைக்கப் படுவதாக  தமிழக NFPE  இணைப்புக் குழு முடிவெடுத்து அறிவித்துள்ளது. வேறு தேதி குறித்து  NFPE  COC  கூடி முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் .

2. தமிழகத்தின்  வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் (டிசம்பர் 2, 3, 4 மற்றும் 5) பணிக்கு வந்து  அலுவலக உடமைகளை காத்திட்ட  ஊழியர்களின்  கடமை உணர்வை பாராட்டி அவர்களுக்கு  அன்றைய  நாட்களுக்கு  பதிலாக  COMPENSATORY  OFF வழங்கிட நமது CHIEF  PMG அவர்கள் உத்திரவிட்டுள்ளார். உத்திரவின் நகல்  இதே  வலைத்தளத்தில்  10 செய்திகளுக்கு  கீழே  SCROLL  செய்து  பார்க்கவும்.  பார்த்தவர்கள் இதர  உறுப்பினர்களிடம்  தெரிவிக்கவும்.

3. ஏற்கனவே கடந்த 3.12.2015 அன்று  அளித்த  EMAIL இன்  தொடர்ச்சியாக , வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்  வெள்ளம்  பாதித்த நாட்களில் பணிக்கு வர இயலாதவர்களுக்கு  SPECIAL  CL  வழங்கிட CPMG  அவர்கள் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்து உத்திரவு வெளியிட பணித்துள்ளார். அந்த  உத்திரவு நாளை  கிடைக்கப் பெறலாம். 

4. தமிழகத்தின் வெள்ளம்   பாதித்த  மாவட்டங்களில் பணியாற்றும்  இலாக்கா  மற்றும்  GDS  ஊழியர்களுக்கு  வெள்ள  முன்பணம் வழங்கிடக் கோரி  நாம் கடிதம் அளித்திருந்தோம். இது போலவே  கடந்த 08.12.2015 அன்று நம்முடைய  SECRETARY  GENERAL  மூலம்  இலாக்கா முதல்வருக்கு ஒரு கோரிக்கை  கடிதம்  தமிழக அஞ்சல் மூன்று சார்பில் அளிக்கக் கோரியிருந்தோம். இதன்படி  கடிதம் அளித்து  கோரிக்கை எழுப்பப்பட்டது. தற்போது  நம்  இலாக்கா முதல்வர் அவர்கள்  வெள்ள  முன் பணம் மற்றும் WELFARE  FUND   மூலம்   உதவிகள் அளித்திட  இன்று (09.12.2015) உத்திரவிட்டுள்ளதாக  தகவல்  கிடைத்துள்ளது.

5. கடந்த  08.12.2015 அன்று  ஊதியக் குழு   அறிக்கை  மீது  மாற்றம் வேண்டி நம்முடைய  NFPE  மற்றும்  FNPO  சம்மேளன  மாபொதுச்  செயலர்கள் இலாக்கா  முதல்வருடன் விவாதித்து  கோரிக்கை  மனு  அளித்துள்ளனர். மனுவின் நகலை   கீழே  6 ஆவது செய்தியில் SCROLL   செய்து   பார்க்கவும்.

6. கோவை   மண்டல  RPLI  கெடுபிடிகள் குறித்தும்  ஊழியர்கள்  மண்டல அலுவலகத்துக்கு தேவையில்லாமல்  REVIEW  MEETING  என்ற பெயரில் வரவழைக்கபடுவது குறித்தும்  PMG WR  அவர்களுக்கு  மாநிலச் சங்கம் கடிதம்  மூலம்  புகார் அளித்துள்ளது.   கீழே  9 ஆவது செய்தியாக  அது வெளியிடப் பட்டுள்ளது.  SCROLL   செய்து பார்க்கவும்.

7. ஈரோடு SR . POSTMASTER  திருவாளர். A . சுந்தரராஜன்  அவர்களின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து  விரிவான  புகார் மனு  CHIEF  PMG அவர்களுக்கு  மாநிலச் சங்கத்தால்  அளிக்கப்பட்டுள்ளது. கடித நகல் மற்றும்  கண்டன  ஆர்ப்பாட்ட புகைப்படம் கீழே  8 ஆவது செய்தியாக  வெளியிடப் பட்டுள்ளது . SCROLL  செய்து  பார்க்கவும்.  

8. மதுரை மண்டலத்தில்  LSG  பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு , அந்தந்த கோட்டங்களில்  காலியிடங்கள் இருந்தும் , வெளி யில் உள்ள கோட்டங்களுக்கு  POSTING  அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது. இது குறித்து  CPMG  அவர்களுக்கு மாநிலச் சங்கம் அளித்த  புகார் கடிதம் கீழே  7 ஆவது செய்தியாக வெளியி டப்பட்டுள்ளது.   SCROLL  செய்து பார்க்கவும்.

9. 2011 முதல்   பதவி உயர்வு பெற்ற / இறந்து போன /  பணி  ஒய்வு  பெற்ற GDS  ஊழியர்களுக்கு  SDBS  காரணமாக  இதுவரை  வழங்கப் படாமல் நிலுவையில் இருந்த  SEVERANCE  AMOUNT வழங்கிட மாநிலச் சங்கத்தின் மூலம்   நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  இது  குறித்த  விபரம்  கீழே  10 ஆவது செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. SCROLL  செய்து  பார்க்கவும்.

மேலும் செய்திகள்  உள்ளன . கடந்த  நாட்களில்  INTERNET  கோளாறு காரணமாக வெளியிட இயலவில்லை. இன்று  ஒரே நேரத்தில் அனைத்து செய்திகளையும்  வெளியிட  இயலவில்லை. எனவே  நாளை   இதர செய்திகள்  வெளியிடப்படும்.

தோழமையுடன்  
உங்கள்  மாநிலச்  செயலர், 
தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கம் .

National Pool of Trainers on Leadership Skills and Ethics

Promotion of PA (SBCO) cadre to LSG (SBCO) cadre

Updation of Gradation Lists (Upto the year 2000) of Inspector of Posts - order dated 02.12.2015

Strengthening of administration - Periodical review under FR56(j)/ FR 56(I)/ Rule 48 of CCS (Pension) Rules, 1972

FR 56 (J)  மற்றும் RULE 48 OF CCS (PENSION) RULES,1972 க்கு கீழே  PREMATURE  RETIREMENT  இல்  அனுப்ப  கமிட்டி  போட்டுட்டாங்கோ .  ஜாக்கிரதை !        
கீழே  பாருங்க  உத்திரவு  நகலை :-

CLICK HERE TO VIEW FR 56 (J) PREMATURE RETIREMENT ORDERS