Running News

Monday 3 August 2015

இளைஞர்களின் தலைக்குமேல் தொங்கும் கத்தி !



Probation and / or confirmation of Direct Recruit P.A./S.A.s - New procedure introduced
புதிய  CONFIRMATION /PROBATION விதி - 
இளைஞர்களின்  தலைக்குமேல் தொங்கும்  கத்தி !

கீழே காணும் நேரடி  எழுத்தருக்கான  PROBATION மற்றும் CONFIRMATIONக் கான 16.04.2015 இல் அளிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி 

முதலாவதாக 

 1. பணிப்  பயிற்சியின் போது  வைக்கப்படும் தேர்வில் குறைந்த பட்சம் 60%
     மதிப்பெண் பெற்று  தேர்ச்சி பெற வேண்டும் .(இது 2011 க்கு பின்னர் 
     நடைமுறையில் உள்ளது )

2.  அப்படி 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவில்லையானால் , இரண்டு
      வாரம் பணிப்  பயிற்சி  நீட்டிக்கப்படும் . அந்த காலத்தில் இரண்டு TEST 
      வைக்கப்படும். அவற்றில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று 
      தேர்ச்சி  பெறவேண்டும் . 

3.   அப்படி தேர்ச்சி பெறவில்லையானால் SATISFACTORY  COMPLETION  OF 
      TRAINING  REPORT  அளிக்கப்படமாட்டாது.

4.   மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்  இரண்டு 
       வாய்ப்புகளில்  குறைந்த பட்சம் 60% மதிப்பெண்பெறவில்லையானால் 
       அவர்களை  இலாக்கா பணியிலிருந்து  TERMINATE  செய்திட 
       நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

5.   இது தவிர, தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெற்று தேர்வு 
      பெற்றாலும் கூட, அவர்களது PROBATION காலத்தில்  அவர்களது 
      CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY  என்று தீர்மானிக்கப்     
      பட்டால்  அவர்களது சேவை  TERMINATE  செய்யப்படும் .

இந்த உத்தரவில் நம் மாநிலச் சங்கத்தின் கருத்து :-

1. REVISED P .A . RULES ,2011 அடிப்படையில் எழுத்தர் தேர்வில் கலந்து 
    கொள்வதற்கு அடிப்படைத் தகுதி 60%, 50%, 45% (GEN , OBC, SC /ST )
    மதிப்பெண் என்பது  நீக்கப்பட்டு MINIMUM  PASS  என்பது அறிமுகப் 
    படுத்தப் பட்ட பிறகு,  பணிப்  பயிற்சியில் குறைந்தபட்சம் 
    60% மதிப்பெண் பெற வேண்டும் என்பது அடிப்படையில் தவறானது,

2. எழுத்தர் தேர்வில்  BASED  ON MERIT  தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ,
    பணிப்  பயிற்சியில்  கட்டாய மதிப்பெண்  வேண்டுவது  சட்டத்திற்கு   
    புறம்பானது.  CONSTITUTION க்கு எதிரானது.

3. எழுத்தர் தேர்வில் QUALIFYING  MARKS  40%, 37%, 33% என்று வைக்கப் 
    பட்ட    பிறகு , பணிப் பயிற்சியில் QUALIFYING  MARKS  60% என்று 
    நிர்ணயிக்கப்பட்டது முற்றிலும் முரணானது.

4.  சமூக நீதி  அடிப்படையில் மத்திய அரசின் நேரடித்தேர்வுகளுக்கே  SC
    /ST,   OBC பிரிவினருக்கு பெறவேண்டிய குறைந்த பட்ச மதிப்பெண்கள் 
     RELAX  செய்து வழங்கப்படும்போது , சாதாரணமான இலாக்காவின் 
     பணிப்பயிற்சிக்கு  கட்டாயமாக குறைந்தபட்ச மதிப்பெண்60%அனைத்து 
    பிரிவினருக்கும் என்று நிர்ணயிக்கப் பட்டது சமூக நீதிக்கும் ,  அரசியல் 
    அமைப்புச்  சட்டத்திற்கும்  முற்றிலும் எதிரானது.

5. இலாக்காவில் அளிக்கப் படும் பணிப்  பயிற்சி என்பது , இலாக்கா 
    விதிகள்  மற்றும்  பணிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்து
    தெரிந்துகொள்ளத் தானே  தவிர , இதில் பெறப்படும் மதிப்பெண்கள் 
    அடிப்படையில்தான்  பணி  நிரந்தரம் செய்யப்படும் என்பது  அடிப்படை 
    விதிகளுக்கு எதிரானது.

6. PROBATION  காலத்தில் CONDUCT & PERFORMANCE  UNSATISFACTORY
    என்று  கருதினால்  பணி  நீக்கம் செய்யலாம் என்பது CORPORATE  சட்டம்
    போல உள்ளது.  CONDUCT & PERFORMANCE க்கு எந்தவித அளவுகோலும் 
   நிர்ணயிக்கப் படவில்லை. 

   PTC  யில் கூட  "கழிப்பறை ஏன் கழுவவில்லை ,  காந்தியார் செய்ய     
   வில்லையா"என்று  கேட்ட/கேட்கும் அதிகாரிகள் உள்ளனர். 

SHRAMDHAN    செய் , YOGA செய் . காலை  4.00 மணிக்கு படுக்கையில் இருந்து எழு  .  12 மணிநேரம் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து இரு. விடுமுறை     தினங்களில்  கூட ஊருக்கு செல்ல அனுமதி கிடையாது முடி வெட்டிக் கொள் , SHOE  போடு , TIE கட்டு . தமிழ் நாட்டில் வேட்டி கட்டக் கூடாது  " என்றெல்லாம்   தடாலடி உத்திரவிட்டு  ஊழியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டது  இங்கு  உண்டு .  இந்த சூழ்நிலையில் எந்த ஊழியராவது எதிர்த்துக் கேட்டால்  இனி CONDUCT  & PERFORMANCE சரியில்லை என்று  REPORT  அளிக்க முடியும்.

  ஆக இந்த விதி  கொத்தடிமைத்தனத்தை  மத்திய அரசு   சேவையில்  நிச்சயம்  அதிகப்படுத்தும். " MODEL  EMPLOYER  "ஆக இருக்க    வேண்டிய  மத்திய அரசுத்   துறையான அஞ்சல் துறை , அதற்கு மாறாக கொத்தடிமை  காலத்திற்கு நம்மை இட்டுச்  செல்வதாகவே  " இந்த விதி " நமக்கு  அறிவுறுத்துகிறது. 

ஏற்கனவே  CONFIRMATION  EXAMINATION வைக்கப் பட்டதே தவறு என்று 
போராடி அதனை நீக்கிய நாம் , இன்று அந்த சட்டமே பரவாயில்லை என்று கூறுமளவுக்கு புதிய சட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 

இந்த சட்டத்தை நிச்சயம் நாம் எதிர்க்கவேண்டிய கடமையில் உள்ளோம்.
தமிழக அஞ்சல் மூன்று அதற்கான முன் கை எடுக்கும் . நம்முடைய அகில இந்திய சங்கம் மற்றும் சம்மேளனத்தின்  பார்வைக்கு இதனை நாம் கொண்டு செல்வோம். இதனை நீக்குவதற்கான முழு நடவடிக்கை களில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் . இதன் மீது  உங்கள் கருத்துக்களை நிச்சயம்  மாநிலச் சங்கத்திற்கு நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். உடன் EMAIL  மூலமோ அல்லது  COMMENTS  பகுதியிலோ  உங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment