Running News

Tuesday 17 February 2015

PJCA PROGRAMME OF ACTION AND TN PJCA DECISIONS

PJCA PROGRAMME OF ACTION AND TN PJCA DECISIONS

அன்புத்  தோழர்களுக்கு வணக்கம் ! 

நேற்று (16.02.2015) மாலை 06.00 மணியளவில்  தமிழக  NFPE  மற்றும் FNPO  சம்மேளனங்களின்  மாநிலச் செயலர்கள் அடங்கிய JCA  கூட்டம்  சென்னை அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தமிழக JCA  வின் தலைவர்   மற்றும் FNPO அஞ்சல் நான்கின்  மாநிலச் செயலர் தோழர். குணசேகரன் தலைமையேற்றார்.  NFPE  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலரும்   தமிழக JCA  வின்  கன்வீனருமான தோழர். J . ராமமூர்த்தி  கூட்டத் திற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தார். 

JCAகூட்டத்தில்   நீண்ட கலந்துரையாடல்  மற்றும்  கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு, எதிர்வரும்  02.03.2015 அன்று  PJCA  வால் அறிவிக்கப்பட்டுள்ள   முழு நாள் தார்ணா  போராட்டத்தை  தமிழக JCA மூலம் சிறப்பாக நடத்துவதென  ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அஞ்சல்  RMS  பகுதிப் பிரச்சினைகள் மீதான  கூட்டுப் போராட்டம் நடத்துவது குறித்து   இரண்டு நாட்களில் கலந்து பேசி  அறிவிப்பதாக  FNPO  தரப்பில் அறிவிக்கப்பட்டது. NFPE அஞ்சல் நான்கில்  மாநிலச் செயற்குழு கூட்டம் கூட்டி  முடிவெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இந்த சூழலில் , நம்முடைய அஞ்சல் மூன்று மற்றும் NFPE  GDS  தமிழ் மாநில சங்கங்களின் மாநில அளவிலான கோட்ட/கிளைச் செயலர்கள் கூட்டத்தின் முடிவின்படி ஏற்கனவே   17.02.2015 மற்றும் 24.02.2015 ஆகிய இரு தேதிகளில் கோட்ட/ கிளை அளவில் மற்றும் மண்டல அளவில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன் மீது தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் , நம்முடைய   அகில இந்திய அளவிலான அஞ்சல் கூட்டுப் போராட்டக் குழு  சார்பாக  தற்போது அறிவிக்கப் பட்டுள்ள 
=====================================================================
Dharna infront of Divisional Offices on 20th February, 2015.
Dharna infront of Regional offices on 27th February, 2015.

ஆகிய  இரண்டு கட்டபோராட்டங்களையும்  எதிர் வரும் 17.02.2015 மற்றும் 
24.02.2015 தேதிகளில்  நம்முடைய மாநிலச் சங்கங்களால் அறிவிக் கப்பட்ட போராட்டத்துடன்  சேர்த்து செய்திட வேண்டுமாறு அன்புடன்   கேட்டுக் கொள்கிறோம். 
=====================================================================
PJCA  வின் மூன்றாவது கட்ட போராட்டமாகிய 
Dharna infront of Circle Offices on 2nd March, 2015.

என்பது  தமிழக அஞ்சல் RMS  JCA  மூலம்  நம்முடைய CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 02.03.2015 அன்று  சிறப்பாக நடத்திடப்படும் .  

=====================================================================

No comments:

Post a Comment